அன்புமணிக்கு வீசிய வலையில் சிக்கிகொண்ட ஸ்டாலின்! வெளியான பரிதாபமான தகவல்!  - Seithipunal
Seithipunal


டெல்லியில் திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே திமுக பாமகவுடன் கூட்டணி பேசியது அமபலம் ஆனது. இருந்தாலும் வெளியில் அதிகாரபூர்வமாக தெரியாமல் இருந்தது. 

காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளை கேட்க திமுக தரப்பில் முதலில் ஆறு தொகுதிகள் மேல் இல்லை என்று கூறினாலும், பின்னர் 10 தொகுதிகள் ஒதுக்கியது. அப்போது கூட்டணி பேச்சுவார்த்தையில் திமுக பாமகவிற்காக காத்திருந்தது வெட்டவெளிச்சமாகிது. திமுக பாமகவிற்காக ஒதுக்கி இருந்த இடங்களை எங்களுக்குக் கொடுக்க வேண்டும் என பகிரங்கமாக காங்கிரஸ் வலியுறுத்தியதை அடுத்து தான் காங்கிரஸ்க்கு அத்தனை தொகுதிகளை ஒதுக்கினார்கள். 

அதிமுக பாமக கூட்டணி அமைந்த அன்று டாக்டர் ராமதாசை கடுமையான சொற்களால் விமர்சித்த மு க ஸ்டாலின் அதே ராமதாசுக்காக காத்திருந்தார் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் அதனை உண்மை என்று உறுதிபடுத்தியிருக்கிறார் பாமகவின் அன்புமணி.  

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அன்புமணி, தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய கட்சிகள் குறித்து பேசும் போது, "எங்களுடன் பல கட்சிகள் கூட்டணிக்கு பேசியது, திராவிட முன்னேற்ற கழகமும் பேசியது என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார். ஆனால் மிக முக்கியமான விஷயமான இதனை அனைவரும் கண்டும் காணதது போல நழுவிவிட்டார்கள். ஏனெனில் அவர்கள் அன்புமணிக்கு வலைவீச ஸ்டாலின் சிக்குவார் என கேள்வி கேட்டவர்களே எதிர்பார்க்கவில்லை.  

ஸ்டாலின் குறித்து அன்புமணி, மறுவிமர்சனம் செய்யமாட்டேன் என அறிவித்துவிட்டார். ஆனால் சமூக வலைதளங்களில் சூடு சொரணை இல்லாமல் பாமகவுடன் கூட்டணி பேசிவிட்டு, ஸ்டாலின் சூடு சொரணை பற்றி பேசலாமா என விமர்சனங்கள் எழுந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin controversial local speech about pmk


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->