தினகரனுக்கும் செந்தில் பாலாஜிக்கும் இடையே நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்கள்!
தினகரனுக்கும் செந்தில் பாலாஜிக்கும் இடையே நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்கள்!
தமிழக அரசியலில் கடந்த இரண்டு நாட்களாக தலைப்பு செய்தியாக இருப்பது, அதிமுக முன்னாள் அமைச்சர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கிய தலைவர் செந்தில்பாலாஜி திமுகவில் இணைகிறார் என்பது தான். துணை பொது செயலாளர் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை சந்திப்பதை செந்தில் பாலாஜி தவிர்த்து வந்துள்ளார். அவர் நாளை திமுகவில் இணைவார் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரவி வருகிறது.
இந்நிலையில் செந்தில்பாலாஜிக்கும் தினகரனுக்கும் எதனால் கருத்து வேறுபாடு உருவானது என தகவல்கள் வந்து கொண்டுள்ளன. திமுகவில் இணைய முடிவெடுக்கும் முன்னர் கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அலுவலத்தில் தனது ஆதரவாளர்களுடன் விவாதம் நடத்தியுள்ளார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் செந்தில் பாலாஜிக்கும் தினகரனுக்கும் எதனால் கருத்து வேறுபாடு உருவானது என்ற தகவலை வெளியிட்டுள்ளனர். அதில் முக்கியமானது தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என செந்தில் பாலாஜி கூறியுள்ளார். ஆனால் இதனை தினகரன் ஏற்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டங்களுக்கு பெரும்பாலும் செந்தில் பாலாஜிதான் செலவு செய்தார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த செலவு தொகையை தினகரன் தரவில்லை எனவும் கூறப்படுகிறது. செலவு செய்வதற்காகவே செந்தில் பாலாஜியை தினகரன் கூட வைத்திருந்தார் எனவும் இதனை செந்தில் பாலாஜி தாமதமாகவே புரிந்து கொண்டார் என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.
திமுகவில் இணையலாமா ஆதரவாளர்களிடம் கருத்து கேட்ட போது, தாராளமாக இணையலாம் என ஆதரவாளர்கள் கூறிய பிறகே திமுகவில் இணையும் முடிவை செந்தில் பாலாஜி எடுத்துள்ளார் எனவும் தெரிகிறது.
English Summary
REASON BEHIND SENTHIL BALAJI JOIN DMK AND EXIT AMMK