ஒவ்வொரு ராசிக்காரர்களின் பண்புகள் மற்றும் குணாதிசியங்கள்!. ஜோதிடர்களின் கணிப்பு!. - Seithipunal
Seithipunal



ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அவர்களது ராசிக்கு ஏற்றவாறு தனித்தன்மை, பண்புகள் இருக்கும். ஒவ்வொரு ராசிக்காரர்களின் பண்புகளை பார்ப்போம்.

ரிஷபம்:-
பிறரிடம் அன்பாக பழகக்கூடிய குணாதிசயம் கொண்டவர்கள், பிடிவாதமே மிகவும் ஆபத்தானவர்களாக மாற்றுகிறது, மரியாதைக்கு முக்கியத்துவம் கொடுத்து கண்ணியமான வாழ்க்கை வாழ விரும்புவார்கள். மற்றவர்களை எளிதில் கவரக்கூடியவர்கள்.

தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தையும், அநீதியையும் பொறுத்துக்கொள்ளாமல் பழிக்கு பழி வாங்கவும் தயங்க மாட்டார்கள். பாசத்தில் இவர்களை அடித்துக்கொள்ள ஆட்களே இல்லை.

கடகம்:-
கடக ராசிகாரர்கள் நுகர்வுத்திறன் அதிகம் கொண்டவர்கள், இவர்களுக்கு அயல்நாட்டிற்கு செல்லும் வாய்ப்பு அடிக்கடி வரும். படிப்பில் ஆர்வம் இல்லவிட்டாலும் அறிவுத்திறன் அதிகம் கொண்டவர்கள்.

குடும்பத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள், சற்று முன்கோவிகளாக இருக்கும் இவர்களது மனநிலை, எளிதில் சமாதான படுத்தும் குணமும் கொண்டவர்கள்.

மிதுனம் :-
தங்களது லட்சியத்தை குறிக்கோளாக கொண்டு இலக்கை அடைய விரும்புவார்கள், சுறுசுறுப்பாக செயல்பாடுவார்கள்.

பொதுவிசயத்தில் உண்மையாக இருக்கும் அவர்கள், தங்களுக்கு தேவையான ஒன்றை அடைவதற்காக பொய் சொல்வதும் உண்டு.

மேஷம்:-
தங்களது சொந்த வாழ்க்கை மற்றும் வேலையை நினைத்து வாழ்பவர்கள், தங்களது வாழ்க்கை பற்றியே எந்நேரமும் சிந்தித்து வாழ்வார்கள்.

யாராவது தொந்தரவு செய்தாலோ, அச்சுறுத்தினாலோ தங்களது மறுமுகத்தை காட்ட தயக்க மாட்டர்கள், எளிதில் மற்றவர்களால் வெறுக்கப்படுவார்கள்.

சிம்மம்:-

உணர்ச்சி மற்றும் இயல்பான தன்மை கொண்டவராக இருப்பதால் காதல், காமம் போன்றவற்றில் ஆர்வமும், பிறருக்கு நியாயம் சொல்லும் அளவுக்கு ஆளுமை திறனும் இருக்கும். 

பிறர்க்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள், தன்னிடம் பொருள் இல்லாவிட்டாலும் பிறரிடம் கடன் வாங்கியாவது மற்றவர்களை சந்தோசப்படுத்துவர்.

கன்னி:-
தங்கள் வாழ்க்கையில் உள்ள விஷயங்கள் பற்றியும், அவர்களது விரும்புவதை பற்றியுமே கவலை கொள்வார்கள்.

இவர்கள் எல்லாவற்றின் மீதும் ஆசைப்படுவதில்லை, ஒரு பொருளை அடைய நினைத்தால் எந்த அளவுக்கு சென்றாவது அடைந்துவிடுவார்கள்.

துலாம்:-
விவேகம் இருக்கிற அளவுக்கு இவர்களிடம் திறமையும் இருக்கும், நடைமுறை மற்றும் வாழ்வில் வெற்றி பெறுவதே இவர்களது குறிக்கோள்.

விரும்பியதை பெறுவதற்காக மற்றவர்களை ஏமாற்றக்கூட தயங்கமாட்டார்கள்.

விருச்சிகம்:-
அவர்களின் இயல்பு, அவர்கள் ஏமாற்ற விரும்பும் போது அவற்றை மிகவும் பயனுள்ளதாக ஆக்குகிறது.

அவர்கள் உண்மையாக இல்லை என்று நீங்கள் நம்ப முடியாத அளவுக்கு அவர்கள் மிகவும் மென்மையானவர்கள் மற்றும் அவர்களின் திறமையான முறைகளில் இயங்குவார்கள், ஏமாற்றுவதில் வல்லவர்கள். எது தொடர்ந்தாலும் செல்வம் கொட்டும்.

தனுசு:-
அவர்கள் ஒரு கூர்மையான புத்தி கொண்டிருப்பதை அர்த்தப்படுத்துகிறது. எனவே, அவர்கள் விரும்பும்வதை திறமையாக கையாள்வதில் மிகவும் வல்லவர்கள்.

ஒரு தனுசு ராசிக்காரரோடு குழப்பம் செய்ய முயற்சி செய்யாதீர்கள், உங்களுடைய சொந்த விளையாட்டில் உங்களை எவ்வாறு தோற்கடிக்க முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

மகரம்:-
உடனடியாக இயங்காததால் அவர்கள் செயலாற்றாததுபோலவும், மந்தமானவர்களாகவும் மற்றும் காலந்தாழ்த்துபவர்களாகவும் தெரிவார்கள்.

உண்மையில் அவர்கள் என்ன செய்கிறார்களோ அதில் மிகவும் திறமையானவர்கள். எனவே, அவர்கள் ஒன்றும் செய்யாமல் சிறிது நேரம் ஓய்வெடுத்து செய்வர்.

கும்பம்:-
அவர்கள் நேர்மையற்றவை, ஏமாற்றுதல் மற்றும் வஞ்சகம் போன்ற விஷயங்களை வெறுக்கிறார்கள். 

தன்னலமற்ற பொதுவுடைமைவாதியாக திகழ்வார்கள். பிறர் ஏமாற்றப்படுவது இவர்களானால் பொறுத்துக்கொள்ள முடியாது.

மீனம்:-
தங்களது சொந்த வாழ்க்கை பற்றி மட்டுமே யோசிப்பார்கள், நீங்கள் எதிராளியாக மாறிவிட்டால், அவர்களது மூர்க்கத்தை தாங்க தயாராக இருக்க வேண்டும்.

கடுமையாக கோவப்படக்கூடிய மனநிலை கொண்டவர்கள், சிலநேரத்தில் சுயநல வாதியாக திகழ்வார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

astrology telling about all rashi behavior


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->