இனி பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது! பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!
saturday no holiday for school
17 வது மக்களைவை தேர்தலுக்கான தேர்தல் தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி, வேட்பாளர், தொகுதி பங்கீடு, பிரச்சாரம் என்று தீவிரமாக காலத்தில் இறங்கியுள்ளனர்.
இதேபோல், வாக்குசாவடிகளாக பயன்பட்டு வரும் பள்ளிகளில் தேர்வுகள் நடக்காமல் இருக்க முன்னதாகவே தேர்வுகள் நடத்த அணைத்து மாநிலங்களும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் சுமார் 10 இலட்சம் வாக்கு சாவடிகள் தயாராகி வருகின்றன.
தமிழகத்தில் 18 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், 1ம் வகுப்பு முதல் 9 வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 20ம் தேதி வரை தேர்வும், பள்ளி வேலை நாட்களும் உள்ளது. இதனையடுத்து பள்ளி பொதுத் தேர்வுகளை ஏப்ரல் 10ம் தேதிக்குள் முடிக்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
ஏப்ரல் 12ம் தேதிக்குள் அனைத்து வகுப்புகளிலும் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், ஏப்ரல் 6-ம் தேதியை தவிர்த்து மற்ற அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு வேலை நாள் என்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்தலால் ஒருவாரம் முன்கூட்டியே பள்ளிகளின் வேலை நாள் முடிவதால், அதனை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் வேலை நாள் என அறிவித்துள்ளது.
English Summary
saturday no holiday for school