பெரிய கோயிலுக்கு முன் உள்ள நந்தியே, இந்த நந்தியை பார்த்துதான் உருவாக்கப்பட்டதாம் ..!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டையைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் கற்றளி என்று சொல்லக் கூடிய கற்கோயில்கள் ஏராளமாக உள்ளன.

முற்காலச் சோழர்கள் காலம் முதல் இங்குள்ள மலைகளில் எல்லாம், குடைந்து கற் கோயில்களை உருவாக்கினர். அது தவிர, தகுதியான இடங்களில் எல்லாம் தேர்வு செய்து, கற்கோயில்களை உருவாக்கி உள்ளனர்.

அந்த வகையில் உருவான முக்கிய கோயில் தான் கொடும்பாளுரில் உள்ள கோயி்ல்கள். புதுக்கோட்டையிலிருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ளது கொடும்பாளுர்.

முற்காலச் சோழர்களின் ஆட்சிக் காலத்தில், இந்தக் கொடும்பாளுர், தலைநகராகவும், சிறந்த வாணிப நகரமாகவும் திகழ்ந்துள்ளது.

சோழர்களின் தலைநகரமான உறையூருக்கும், பாண்டியர்களின் தலைநகரமான மதுரைக்கும் இடையே இருந்த அந்தக் கால வணிகப் பெரு வழியில், இந்தக் கொடும்பாளுர் எழில் மிகுந்த தோற்றத்துடன் திகழ்ந்திருக்கிறது.

கோவலனும், கண்ணகியும் பூம்புகாரிலிருந்து, மதுரைக்கு இந்த வழியே தான் சென்றார்களாம். இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த ஊருக்கு கொடும்பாளுர் என்ற பெயரே நிலைத்திருக்கிறது.

மேலும், அந்தக் காலத்தில், தமிழகத்தை ஆட்சி செய்த பல மன்னர்களும், குறு நில மன்னர்களும், ஆட்சி உரிமைக்காக இந்தக் கொடும்பாளுரில் பல போர்கள் நடத்தி உள்ளனர்.

அத்தனை கடந்த கால சரித்திரங்களையும் தன்னகத்தே சுமந்து கொண்டு, மிக அமைதியான, ஒரு கண்காட்சிக் கூடத்தைப் போலத் தற்போது தோற்றம் அளிக்கிறது, கொடும்பாளுர்.

இந்த ஊரின் எல்லையில், தெற்குப் பகுதியில் ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட நந்தி சிலை உள்ளது. 9 அடி நீளமுள்ள இந்த நந்தி சிலை, தஞ்சைக் கோயிலில் ராஜரானால், செய்து வைக்கப்பட்ட, நந்தி சிலைக்கு முந்தையது.

9 அடி நீளமுள்ள இந்த நந்தி சிலையை மாதிரியாகக் கொண்டு தான், பிற்காலத்தில், ராஜராஜன், பெரிய கோயிலுக்கு முன் உள்ள நந்தி சிலையை உருவாக்கி இருக்கிறான்.

அத்தகைய சிறப்பு மிக்க இந்த நந்தி சிலை, தற்போது, ஊரின் முன்பாக, தனியாக ஒரு புதுக்கவிதை போலத் தோற்றம் அளிக்கிறது.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nandhi Statue For Before BIG Temple Nanthi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->