ஆதி சிவலிங்கம்..! மர்மமான பாதாளக் கிணறு..!! - Seithipunal
Seithipunal


மூவர் கோயில் பகுதியில் உள்ள இரண்டு கோயில்களும், இரட்டைக் கோயிலைப் போலத் தோற்றம் அளிக்கிறது.  கருவறையின் வெளிப்புறத்தைச் சுற்றி, உள்ள தேவ கோட்டங்களில், சிவபெருமானின் விதம் விதமான வடிவங்கள், தத்ரூபமாக, மிக நுணுக்கத்துடன், உருவாக்கப் பட்டிருக்கிறது.
    
காளையை வாகனமாகக் கொண்ட சிவபெருமான், அந்தக் காளையை வாஞ்சையுடன், அருகில் இருந்து வருடிக் கொடுப்பதைப் போல, ஒரு புறம் அமைக்கப் பட்டுள்ளது.
    
மற்றொரு தேவ கோட்டத்தில், சிவன் வீணையைக் கையில் ஏந்தி நிற்பதைப் போன்ற, வேறெங்கும் காண இயலாத, வித்தியாசமான வீணா மூர்த்தியின் சிற்பமும், காணக் கிடைக்கிறது.
    
கோயில் விமானத்தில், சிவனும் பார்வதியும், காதல் கசிந்துருகி, தம்பதி சமேதமாகக் காட்சி அளிக்கும், வடிவத்தையும், சிற்பி மிக நேர்த்தியாக வடித்திருக்கிறார்.    
இந்தக் கோயிலில், ஆதி சிவலிங்கம் என்று சொல்லக் கூடிய, ஆவுடை இல்லாத பெரிய சிவலிங்கம் இருக்கிறது. ஒரே கல்லால் உருவான, இந்த லிங்கத்தை, சரி பாகமாக மூன்று வடிவங்களில் செதுக்கியிருக்கிறார்கள்.
    
கீழே சதுர வடிவில், நான்கு திசைகளிலும், நடுவில் எண் பட்டைக் கோண வடிவிலும், மேலே, உருளையாகவும் இதன் அமைப்பு உள்ளது. கீழ்பாகம் படைக்கும் கடவுளான  பிரம்மனையும், நடுப்பகுதி காக்கும் கடவுளான விஷ்ணுவையும், மேலே உள்ள உருளையான பகுதி, படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களையும் புரியும், சிவனைக் குறிப்பதாகவும் உள்ளது. 
    
மற்றொன்று, பாதாளக் கிணறு! இந்தக் கிணற்றுக்குச் செல்ல, கோயிலில் இருந்து, ரகசியமாக படிக்கட்டுகளை, கட்டி வைத்திருக்கிறார்கள். கீழே சுரங்க முடிவில் தான், கிணற்றில் அடிப்பாகத்தில் நுழைவதற்கான வாயில் அமைந்திருக்கிறது.
    
பாதுகாப்பு கருதி, செய்யப்பட்ட இந்த ஏற்பாடுகள், தற்போது, கண்காட்சி கூடங்களாக இருந்து நமக்கு, பல உன்னத வரலாற்றுச் செய்திகளைச் சொல்லிக் கொடுக்கின்றன. 
    
முற்காலச் சோழர்களின் சிற்பக் கலைக்கு, இதை விட சிறந்த சான்றாக, வேறெந்தக் கோயிலையும் காட்ட இயலாது, என்பதே மறுக்க முடியாத உண்மை!
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mysterious underworld well in linga


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->