வேண்டாம் என்னை விட்டுவிடு, கெஞ்சிய கணவன்! ரத்தவெள்ளத்தில் துடிதுடிக்க கொடூர மனைவி செய்த செயல்!
wife killed husband for her illegal affairs
திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வந்தவர் மணிவண்ணன் . இவரது மனைவி காயத்ரிதேவி. இவர் கடந்த ஒரு சில தினங்களுக்கு மின் கரூரை அடுத்த மணல்மேடு பகுதியில் கல்லால் தலை நசுக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டு சடலமாக கிடந்தார்..
இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மணிவண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் மணிவண்ணனின் மனைவி காயத்ரிதேவி தனது கணவரின் சடலத்தை பார்த்து, தானும் சாகப்போவதாக கூறி கதறி அழுதுள்ளார்.
இதைப் பார்த்த பலரும் வேதனையில் கண்கலங்கினர். இந்நிலையில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் காயத்ரிதேவியிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.
அதனால் அவர்மீது இருந்த சந்தேகம் எழுந்த நிலையில், அவர்கள் மேற்கொண்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், காயத்ரிதேவி கணவரை கொன்றதை ஒப்பு கொண்டார்.
மேலும் காயத்ரி நான் கமலக்கண்ணன் என்பவரை காதலித்து வந்தேன். நாங்கள் உல்லாசமாக இருக்க எனது கணவன் மணிவண்ணன் இடையூறாக இருந்ததால், அவரைக் கொலை செய்ய முடிவெடுத்து கமலக்கண்ணனின் நண்பர்கள் உதவியுடன், கணவர் மணிவண்ணனை நான்தான் கொன்றேன்
மேலும் எனது கணவர் என்னை விட்டுவிடு, நீ விருப்பப்பட்டபடியே யாருடன் வேணுமானாலும் வாழு'ன்னு அவர் என்னிடம் கெஞ்சியும் நங்கள் விடவில்லை, கொன்றுவிட்டோம் என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து போலீசார் காயத்ரிதேவி, கள்ளக்காதலன் கமலக்கண்ணன் மற்றும் அவரது நண்பர் ரூபன்குமார் ஆகிய மூவரையும் கைதுசெய்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
wife killed husband for her illegal affairs