ரஜினி குறித்து பல்டி அடித்த விவேக் சிம்பு குறித்து கூறியது என்ன!
ரஜினி குறித்து பல்டி அடித்த விவேக் சிம்பு குறித்து கூறியது என்ன!
தேனாம்பேட்டையை சேர்ந்த சிம்பு ரசிகர் மன்ற நிர்வாகி மதன் கடந்த வாரம் உயிரிழந்தார். அவரின் நினைவு அஞ்சலி போஸ்டரை நடிகர் சிம்பு சுவற்றில் ஒட்டினார். அந்த போட்டோ, வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து சிம்பு ரசிகர்கள் இது குறித்து பெருமிதத்துடன் தங்களது பதிவுகளை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், தன் ரசிகரின் மறைவுக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டும் சிம்புவை என்ன சொல்ல, இந்த ஈர மனம், கொஞ்சம் ஒழுங்கு, காலம் தவறாமை இவை பழகினால் மீண்டும் உயர்வார். அவர் இடம் அப்படியே இருக்கிறது’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சிம்பு குறித்து சொல்லப்படும் பெரும்பாலான குற்றச்சாட்டு காலம் தவறுவது தான் அதனை குறிப்பிட்டு விவேக் கூறியுள்ளார். அதேபோல சிம்பு அவரின் தந்தையை போல பல திறமை படைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரின் திறமைக்கு இணையான திறமையாளர் தற்போது சினிமா உலகில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.