விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி ரத்து..! காரணம் தெரியுமா..? - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நாளை நடைபெறவிருந்த விஜய் அவார்ட்ஸ் விருது வழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. 

தமிழ் திரைத்துறையில் வெளியாகும் படங்களை தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளில் விஜய் அவார்ட்ஸ் முன்னணி இடத்தில் இருக்கிறது. 

ஸ்டார் விஜய் நிறுவனம் வழங்கும் இந்த விருது வழங்கும் விழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 10வது ஆண்டாக விஜய் விருதுகள் வழங்கப்படுவதால் அதற்கான விளம்பரங்களும் ஒளிபரப்பப்பட்டது. 

விருதிற்குரிய கலைஞர்களை இயக்குநர்கள் கே.எஸ். ரவிக்குமார், கே. பாக்யராஜ், அனுராக் காஷ்யப், நடிகர் யூகிசேது, நடிகை ராதா அகியோர் நடுவர்களாக இருந்து தேர்ந்தெடுத்தனர்.

தொடர்ந்து, அஞ்சலி, காஜல் அகர்வால், சயிஷா, ஹரிஷ் கல்யாண் ஆகியோரின் நடன நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக நடைபெறவிருந்த நிலையில், இந்த நிகழ்ச்சி தற்போது ரத்து செய்யப்பட்டது. 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது மீண்டும் எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijiy television awards


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->