விஜய்சேதுபதி என்றதுமே அஞ்சலிக்கு டபுள் ஓகே... ஜெய் உடனான காதல் முறிவுக்குப் பிறகு அஞ்சலி எடுத்த அதிரடி முடிவு..?
ஜெய் உடனான காதல் முறிவுக்குப் பிறகு விஜய் சேதுபதியுடன் நடிக்கும் வாய்ப்பு கை மேல் வரவே டபுள் ஓகே சொல்லியுள்ளார் நடிகை அஞ்சலி.
ஜெய் உடனான காதல் முறிவுக்குப் பிறகு விஜய் சேதுபதியுடன் நடிக்கும் வாய்ப்பு கை மேல் வரவே டபுள் ஓகே சொல்லியுள்ளார் நடிகை அஞ்சலி.
சமீபத்தில் தனது எடை குறைந்த ஒல்லி பெல்லி போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்தார் அஞ்சலி.
தற்போது உடல் வாகு எப்படி இருந்தாலும், அஞ்சலிக்கு பட வாய்ப்புகள் தேடி வரத் தொடங்கியுள்ளன.
சசிகுமாருக்கு ஜோடியாக நாடோடிகள்-2 படத்தில் நடித்து வரும் அஞ்சலி, அடுத்து விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
அருண் குமார் இயக்கத்தில் இரண்டு படங்களைத்தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.
பாகுபலி இரண்டாம் பாகத்தை தமிழ்நாட்டில் வெளியிட்ட கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
இந்த படத்தில் நடிக்கறீங்களா என்று கேட்ட உடனே, விஜய்சேதுபதி படம் என்பதால் டபுள் ஓகே என்று சொல்லி ஒப்புக்கொண்டார்.
ஏற்கனவே வெளியான 'இறைவி' படத்தில் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Vijaysethupathi Anjali-to-be-pair-again