பெற்றோர்களே இதை மட்டும் செய்யுங்கள்.! கவிஞர் வைரமுத்து விடுத்த அன்பு வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் அழிவில்லாமல் மென்மேலும் வளர வேண்டுமென்றால் முதலில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தூய தமிழில் அனைவருக்கும் பொருள் புரியும்படி பெயர் வைக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றசாட்டை வைத்தார். இது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் வைரமுத்து எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போதுதான் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்துவருகிறார்.

மேலும் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்தவர் சங்கரபாண்டியன். அவர் அப்பகுதியில் தையல் கலைஞராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஏழ்மையால் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், தமிழின் மீது கொண்ட மிகுந்த பற்றால்,  பல நூல்களை கற்றுத் தேர்ந்து தற்போது திருக்குறளும் பொருட்குறளும் என்ற புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்த நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டியில் உள்ள கவிப்பேரரசு வைரமுத்துவின் பண்ணை வீட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக வைரமுத்து பங்கேற்று நூலின் முதல் பிரிதியை வெளியிட்டார். 
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து, தமிழகத்தில் தமிழ் சிறிது சிறிதாக அழிந்து வருகிறது. தமிழை மென்மேலும் நன்கு வளர்த்தெடுக்க வேண்டும் என்றால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பொருள் விளங்கும் வகையில்.அனைவருக்கும் புரியும்படியும் தூய தமிழில் பெயர் வைக்க வேண்டும்.

இதற்கு பெற்றோர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் பண்டைய காலத்தில் உள்ளதை போல பெயர் வைத்தால் தமிழ் மொழி மென்மேலும் நன்கு வளரும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vairamuthu request parents for baby naming in tamil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->