குடும்ப கஷ்டத்தினால் பூமிகா செய்த வேலை.........மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க காரணம் இது தானாம்!
குடும்ப கஷ்டத்தினால் பூமிகா செய்த வேலை
பிரபல முன்னணி நடிகரான விஜயுடன் பத்ரி எனும் படத்தில் அறிமுகமாகி தெலுங்கில் கொடி கட்டி பறந்தவர் நடிகை பூமிகா.
இவர் நடித்த ரோஜாக்கூட்டம் படமும் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது.
இவர் கடந்த 2007ம் ஆண்டு பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். அந்த நேரத்தில் இவர் தனது குடும்ப கஷ்டம் காரணமாக கால் சென்டர் வேலைக்கு கூட போனதாக கூறப்பட்டது.
இந்நிலையில் பூமிகா தற்போது மீண்டும் படங்களில் தலைகாட்ட ஆரம்பித்துள்ளார். இவர் தமிழில் நடிகர் பிரபுதேவாவுடன் களவாடிய பொழுதுகள் மற்றும் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் தனது கணவருடன் சேர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டதாகவும், அதனால் ஏற்பட்ட பெரும் நஷ்டத்தை சரிகட்டவே மீண்டும் சினிமாவில் நடிக்க வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த செய்தியை கேட்டு மிகுந்த கோபமடைந்த பூமிகா கூறும்போது, நான் கடன் பிரச்சனையால் நடிக்க வந்தேன் என்பது உண்மை அல்ல என்றும் போதிய அனுபவம் இல்லாததால் தான் நஷ்டம் ஏற்பட்டது என்றும் ஆனால் நான் நல்ல படம் தயாரித்தேன் என்ற பெயர் எனக்கு கிடைத்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர், எப்படி இவ்வாறான தகவல்கள் வெளிவருகிறது என்று எனக்கு தெரியவில்லை என்றும் மீண்டும் தொடர்ந்து நல்ல வேடங்கள் கிடைப்பதால்தான் நான் நடித்து வருகிறேன் என்று பூமிகா கூறியுள்ளார்.
English Summary
This is the reason for actress bhumika Re Entry