திரைத்துறைக்கு தொல்லை கொடுத்து வந்த, தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது?
திரைத்துறைக்கு தொல்லை கொடுத்து வந்த, தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது?
தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு தயாரிக்கும் திரைப்படங்கள் பல, திரையரங்கில் ரிலீசான அடுத்த நாளே இணையதளத்திலும் ரிலீசாகி விடுகிறது. இதனால் அவர்களுக்கு போட்ட லாபம் கிடைப்பதில்லை. மேலும் பல மடங்கு நஷ்டம் ஏற்படுகிறது. இது போன்று திரைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் இணையதளங்களில், மிக பிரபலமானது தமிழ் ராக்கர்ஸ் தான்.
நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவி ஏற்ற உடன் செய்த முதல் சபதம், தமிழ் ராக்கர்ஸை ஒழிப்பது தான். ஆனால் அவர் சொன்னபடி எதுவும் நடைபெறவில்லை. தொடர்ந்து தமிழ் ராக்கர்ஸ் தனது வேலையை திறம்பட செய்து வருகிறது.
சில நாட்கள் முன்பு விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தை முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ். ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 29ம் தேதி உலகம் முழுவதும் 2.0 படம் வெளியாகியது. இந்த படத்தை முதல் நாளே இணையத்தில் வெளியிட்டு ரஜினி ரசிகர்களை அதிர்ச்சி தள்ளியது தமிழ் ராக்கர்ஸ்.
இந்த நிலையில் தமிழ் ராக்கர்ஸின் அட்மின் கோவையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிறுப்பில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவரின் பெயர் மற்றும் விவரங்களை உடனடியாக வெளியிடவில்லை.
English Summary
tamil rockers admin arrested