இணையத்தில் கசிந்த சூர்யா படகாட்சிகள், அதிர்ச்சியில் படக்குழுவினர் விடுத்த வேண்டுகோள்.!
இணையத்தில் கசிந்த சூர்யா படகாட்சிகள், அதிர்ச்சியில் படக்குழுவினர் விடுத்த வேண்டுகோள்.!
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் என்.ஜி.கே. மேலும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் என்.ஜி.கே படப்பிடிப்புகள் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் படம் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாகவும் விமர்சனங்கள் கிளம்பின.
மேலும் சூர்யா ரசிகர்களும் படத்தின் புகைப்படங்கள் மற்றும் டிரெய்லரை எதிர்பார்த்து கொண்டிருந்தனர். அதுமட்டுமின்றி படம் எப்பொழுது வெளிவரும் என்று ரசிகர்கள் செல்வராகவனிடம் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு என்.ஜி.கே. படத்தின் படபிடிப்பு கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்று வருகிறது . அங்கு, சூர்யா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து படப்பிடிப்பை காண ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்துள்ளனர். மேலும் அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘ரசிகர்கள் அனைவரும் சூர்யா அண்ணா மற்றும் என்.ஜி.கே படம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பது புரிகிறது. படம் முழுவதையும் உங்களுக்காகத்தான் தயார் செய்து வருகிறோம். படம் வெளியாகும் வரை உங்களது ஆர்வத்தை கொஞ்சம் கட்டுப்படுத்தி வையுங்கள். பட காட்சிகளை தயவுசெய்து கசிய விடாதீர்கள்’’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
English Summary
surya movie scenes leaked