லியோ படத்தை திரையிட வேண்டாம்!! இலங்கை தமிழ் எம்பிக்கள் நடிகர் விஜய்க்கு கடிதம்!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தில் த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் மேனன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிப்பில் ஆயுத பூஜையை முன்னிட்டு நாளை (அக் 19) உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொடங்கி ட்ரெய்லர் வெளியிடுவதை வரை பெரும் சிக்கல்களை லியோ சந்தித்து வரும் நிலையில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிட வேண்டும் என்பது அரசின் விதி என்றால் அதனை மீற முடியாது என்றும் சென்னை உயர்நீதி மன்றம் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய வழக்கில் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையிலான பிரச்சனையால் ரோகினி திரையரங்கில் லியோ திரைப்படம் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சென்னை மற்றும் அதன் புறநகரில் உள்ள பிரபல திரையரங்குகளில் இன்னும் டிக்கெட் முன்பதிவு ஆரம்பிக்காமல் இருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இலங்கையில் நாளை லியோ படத்தை திரையிட வேண்டாம் என இலங்கை தமிழ் எம்பிகள் நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில் வரும் அக்டோபர் 20ம் தேதி நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் லியோ படம் வெளியானால் போராட்டத்திற்குப் பின்னடைவாக இருக்கும் என குறிப்பிட்டு நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

srilankan tamil mps writento vijay donot release leo on oct19


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->