இவர்களை வைத்து தான் நடிகைகளுக்கு வலை விரிக்கின்றனர்.! ஸ்ரீரெட்டியின் பரபரப்பு தகவல்.!! நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் தொழில்நுட்பத்தை பற்றி தெரியுமா.?!!
இவர்களை வைத்து தான் நடிகைகளுக்கு வலை விரிக்கின்றனர்.! ஸ்ரீரெட்டியின் பரபரப்பு தகவல்.!! நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் தொழில்நுட்பத்தை பற்றி தெரியுமா.?!!
தெலுங்கு நடிகை, ஸ்ரீரெட்டி நடத்திய அரை நிர்வாண போராட்டம் தெலுங்கு மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரபல தெலுங்கு நடிகர் உட்பட பல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீதும் நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறினார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிரபல தமிழ் இயக்குநர் மீதும் குற்றம் சாட்டினார்.
முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் என தமிழ் சினிமா ஆளுமைகளின் மீது தொடர்ந்து ஸ்ரீரெட்டி பாலியல் புகாரை கூறி வருது தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இளம் நடிகர் சந்தீப் பெயரையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து பதிவிட்டிருந்தார். பிரபல நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி, தமிழில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஆதி ஆகியோரும் ஸ்ரீரெட்டியின் பட்டியலில் சிக்கினர்.
இதையடுத்து, முன்னணி நடிகைகள் வெளிநாடு சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். மேலும் அவர்கள், இங்கு ஒரு வருடத்தில் சம்பாதிக்கும் வருமானத்தை அங்கு சென்று ஒரு வாரத்திலேயே சம்பாதித்து விடுவார்கள் எனவும் இந்த விவகாரத்தில் அமெரிக்க காவல்துறையினருக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்து விசாரணைக்கு உதவி வருகிறேன்” எனவும் ஸ்ரீரெட்டி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பிரபலங்கள் தங்களது மேனேஜர்கள் மற்றும் துணை நடிகர், நடிகைகளை ஏற்பாடு செய்யும் ஏஜென்டுகள், மூலமாக வலைவிரித்து வருவதாக கூறியுள்ளார். மேலும், உனக்கு வாய்ப்பை வழங்கி, திரைப்படத்துறையில் உன்னை பெரிய ஆளாக்குகிறேன், அதற்கு பதிலாக வாய்ப்பு கொடுக்கும் எங்களுக்கு என்ன தருவீர்கள் என்று கேட்பார்கள். இது தான் நடிகைகளை திரைப்படத்துறையினர் படுக்கைக்கு அழைக்கு தொழில்நுட்பம் என்று கூறினர்.
English Summary
sri reddy explain the actress sexual harassment