ஜீ தமிழுக்கு எதிராக சன் டிவி எடுத்த அதிரடி முடிவு! என்ன நடக்க போகிறதோ? காத்திருக்கும் ரசிகர்கள்!
serial competetion
தற்போதைய வாழ்க்கைமுறையில் பலர் சீரியல் தொடருக்கு அடிமையாய் இருக்கின்றனர். தமிழ் தொலைக்காட்சியில் TRP ரேட்டிங்கில் சன் தொலைக்காட்சி நீண்ட நாட்களாக முதல் இடத்தில இருந்துவந்தது. தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடர் அதனை முறியடித்துள்ளது. சமீப காலமாக செம்பருத்தி தான் தமிழ் தொலைக்காட்சியில் முதல் இடத்தில் இருந்துவருகிறது.
முன்பெல்லாம் இல்லத்தரசிகள் மட்டுமே அதிகம் சீரியல் பார்த்தனர். ஆனால், தற்போது இளைஞர்கள், இளம்பெண்கள் என பெரும்பாலானோர் டிவி சீரியல் பார்க்க தொடங்கிவிட்டனர். சீரியல் என்பது ஒரு வித போதை மாதிரி தான். ஒருமுறை பார்த்துவிட்டால் தினமும் அதனை பார்க்கும் விதமாக நம்மை மாற்றிவிடுவார்கள்.
இந்த நிலையில் சன் தொலைக்காட்சியில், செம்பருத்தி தொடரை மிஞ்சும் வகையில், ரசிகர்களை கவர்ந்த ரோஜா எனும் தொடரை ஒளிபரப்ப உள்ளனர். ஏற்கனவே ரோஜா தொடர் பகலில் ஒளிபரப்பாகி வருகிறது. வரும் மார்ச் 18 ஆம் தேதி முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்ப உள்ளனர்.
எவ்வளுவுதான் டெக்னலாஜி முன்னேறினாலும், மக்கள் இன்னும் சீரியல் தொடர்களுக்கு அடிமையாய் இருந்துவருவது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது.