தனது மனைவி மது அருந்திவிட்டு அட்டூழியம் செய்கிறார்!! பிரபல நடிகர் புகார்!
serial actor complaint on his wife
கன்னட சீரியல் நடிகர் ராஜேஷ் துருவாவும், ஸ்ருதி என்ற பெண்ணும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து சில வருடங்களில் இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில் இருவரும் சில காலம் பிரிந்து வாழ்ந்தனர்.
இந்நிலையில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஒரு குற்றத்தை வைத்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து தன் மீது ஸ்ருதி வீண் பழி சுமத்துவதாக கூறியுள்ளார். பின்னர் தனது மனைவி மது போதையில் அட்டூழியம் செய்வதாக கூறி, அவரது மனைவி மது பாட்டிலை கையில் வைத்துக்கொண்டு ரகளை செய்யும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ஸ்ருதி அளித்த புகாரில், ராஜேஷும் அவர் அம்மாவும் என்னை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாகவும், ஆனால் ராஜேஷுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளது, அவரோடு ரகசிய வாழ்க்கை வாழ்கிறார். ராஜேஷுக்கு இரண்டாம் திருமணம் செய்துவைக்க அவர் அம்மா முயல்கிறார் என காவல்துறையில் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து காவல்துறையினர் இது குறித்து ராஜேஷிடம் விசாரணை செய்தனர். போலீசாரிடம் அவர் கூறுகையில், என்னையும், என் அம்மாவையும் ஸ்ருதி மனரீதியாக துன்புறுத்தினார். நான் ஏற்கனவே விவாகரத்து கேட்டு ஸ்ருதிக்கு மனு அளித்தேன், ஆனால் அவர் அதற்கான பதிலை இன்னும் வழங்கவில்லை. வேண்டுமென்றே என் மீது பழிசுமத்துகிறார் என கூறினார். இதனையடுத்து இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
serial actor complaint on his wife