அணைத்து மக்களையும் வீட்டிற்கு கறிவிருந்துக்கு அழைத்த செந்தில் கணேஷ்! என்ன காரணம் தெரியுமா?
senthil ganesh invites people
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு சூப்பர் சிங்கர் டைட்டிலை வென்றவர் மக்கள் இசைக் கலைஞர் செந்தில் கணேஷ்.
அதனை தொடர்ந்து ஏ.ஆர் ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பை பெற்றார். மேலும் அவருக்கு சினிமாவில் படுவதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகிறது. மேலும் அவர் தனது மனைவி ராஜலக்ஷ்மியுடன் ஜோடி சேர்ந்து சார்லி சாப்ளின் 2 படத்தில் சின்ன மச்சான் பாடலையும், தலை அஜித்தை நடித்த விஸ்வாசம் படத்தில் டங்கா டங்கா போன்ற பாடலையும் பாடியுள்ளார்.
இந்நிலையில் செந்தில் கணேஷின் மகளின் இரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் களபம் கிராமத்தில் கறிவிருந்து வைத்துள்ளார். மேலும் அவரது மகளின் புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு எனது #மூன்றாவது #தாய்க்கு இன்று இராண்டவது #பிறந்த #நாள். என் தாய் கிராமமான #களபத்தில் தான் #விழா, #கறிவிருந்தோடு. அனைவரும் வருக.... என வரவேற்றுள்ளார்.
அவரின் அழைப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் அவரது முகநூல் பக்கத்திலேயே வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
English Summary
senthil ganesh invites people