மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்து பாராட்டிய ரஜினி! மகிழ்ச்சியில் ரஜினி ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு பல்வேறு தரப்பினரும், சமூக ஆர்வலரும், சினிமா பிரபலங்களும் மற்றும் அரசியல் பிரமுகர்களும் நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண நிதி வழங்கினார்.

ரஜினிகாந்தின் ரஜினி மக்கள் மன்றம் சார்பிலும் பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுக்க இருக்கும் ரஜினி மன்ற உறுப்பினர்கள் அனுப்பிய நிவாரண பொருட்கள் அனைத்தும் சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டது.

இதை டெல்டா மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார். இதில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களையும், நிர்வாகிகளை நேற்று ரஜினிகாந்த் நேரில் சந்தித்தார். அவர்கள் நிவாரண உதவிகளை சிறப்பான முறையில் வழங்கியதற்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth praise to mandra administrators


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->