முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது!! அதிரடியாக அறிவிப்பை வெளியிட்ட ரஜினி!!  - Seithipunal
Seithipunal


நேற்று முன்தினம் காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாதி  மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது நடத்திய கொடூர தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்களை பலியாகியுள்ளனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலை ஏற்படுத்திய பயங்கரவாதிகளுக்கு அரசியல் தரப்பு மட்டுமல்லாது அனைத்து தரப்பில் இருந்தும் பெரிய அளவில் கண்டனம் குவிந்து வருகிறது.

 இத்தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அவர், ' ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய மன்னிக்க முடியாத தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். 

போதும்... நடந்தவரை போதும்... இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. பலியான வீரர்களின் குடும்பத்தினருக்காக என் இதயம் கலங்குகிறது.

உலகை விட்டுப்பிரிந்த தைரியமான அந்த இதயங்களின் ஆன்மா சாந்தியடையட்டும்" என தனது அறிக்கையில் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajini says about kashmir attack


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->