சிவகர்த்திகேயனை தொடர்ந்து நயன்தாரா செய்ய போகும் விபரீதம்!
சிவகர்த்திகேயனை தொடர்ந்து நயன்தாரா செய்ய போகும் விபரீதம்!
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நயன்தாரா, இவர் தயாரிக்க போகும் புதிய படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின.
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகி நயன்தாரா. இவர் நடிகர் அஜித்துடன் இணைந்து விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். மேலும் "டோரா, அறம்" படம் மூலம் தனக்கென ஓர் இடத்தில் கால்பதித்தார். இவர் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.
இவர் நடித்து வெளிவந்த அறம் படத்தை நயன்தாராவின் மேலாளராக இருந்தவர் தயாரித்தார். ஆனால் சிலர் நயன்தாராவின் சொந்த தயாரிப்பு என்று கூறினார்கள். இந்நிலையில் நயன்தாராவே நேரடியாக தயாரிப்பாளராக மாறப்போகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
இதுபோல தான் சிவகார்த்திகேயன் அவரது மேலாளர் தயாரித்த படங்களில் நடித்தபோது அது சிவகார்த்திகேயன் நிறுவனம் என்று செய்தி வந்தது. பின்னர் தனியாக ஒரு நிறுவனம் தொடங்கினார். இப்போது அதுபோல நயன்தாராவும் தனியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்குகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இது போல நயன்தாராவும், புதிய படத்தை விக்னேஷ் சிவன் வைத்து இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
English Summary
Nayanthara Produce New Movie