பிக்பாஸ் சீசன் 2 துவங்கியது: இனி 100 நாட்கள் தமிழகத்தில் என்ன நடந்தாலும் குழி தோண்டி புதைக்கப்படும் - அதிர வைக்கும் சதி வலை..?
பிக்பாஸ் நிகழ்ச்சி மீண்டும் தொடங்கி உள்ளதால், இன்னும் 100 நாட்களுக்கு பெரும்பாலான மக்கள் பிரச்சனை முக்கியத்துவம் பெறாமல் போய்விடும் என்று வருந்துகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மீண்டும் தொடங்கி உள்ளதால், இன்னும் 100 நாட்களுக்கு பெரும்பாலான மக்கள் பிரச்சனை முக்கியத்துவம் பெறாமல் போய்விடும் என்று வருந்துகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
வௌிநாடுகளிலும், வட இந்திய சேனல்களிலும் பிரபலமாக இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, கடந்தாண்டு தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் களமிறங்கியது.
தமிழில் விஜய் டிவியில் ஔிப்பரப்பான இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியது கூடுதல் சிறப்பு.
கடந்த சீசனில் ஓவிய - ஆரவ் காதல், ஓவியா தற்கொலை சம்பவம், சினேகனின் கட்டிப்பிடி வைத்தியம், காயத்திரி ரகுராமின் கெட்டவார்த்தை, ஜூலியின் பொய்யான நாடகம் என நிகழ்ச்சி களை கட்டியது.
முதல் சீசனில் ஆரவ் வெற்றி பெற்றார்.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர் இப்போது பிரபலமாகி உள்ளனர்.
அந்தவகையில் இதன் இரண்டாவது சீசன் பற்றிய அறிவிப்பு வௌியானவுடன் இந்த நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு எகிறியது.
இரண்டாவது சீசனையும் கமல் தொகுத்து வழங்குகிறார்.பிக்பாஸ் 2 ஜூன் 17 (நேற்று) முதல் ஆரம்பமானது.
இந்த சீசனில் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த சீசனில் பாதியில் வௌியேறிய ஓவியா, இந்த முறையும் உள்ளே சென்றுள்ளார்.