சென்னை நட்சத்திர ஓட்டலில் குடி போதையில் சண்டைபோட்டு போலீசில் சிக்கிய முன்னணி நடிகர்!
சென்னை நட்சத்திர ஓட்டலில் குடி போதையில் சண்டைபோட்டு போலீசில் சிக்கிய முன்னணி நடிகர்!
தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடிப்பவர் பாபி சிம்ஹா. 2012-ம் ஆண்டு வெளிவந்த காதலில் சொதப்புவது எப்படி, மற்றும் பிட்சா போன்ற படங்களின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இன்று அதிகாலை நடிகர் பாபி சிம்ஹா கிண்டியில் உள்ள தனியார் உணவு விடுதிக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். விடுதிக்கு சென்ற நடிகர் பாபி சிம்ஹா அங்கு நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். மது போதை அதிகமாக ஆனதால் அப்போது பாபி சிம்ஹாவுக்கும் அவரது நண்பர் கருணாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட இறுதியில் அது அடிதடியில் முடிந்துள்ளது.
அப்போது தனியார் உணவு விடுதி ஊழியர்கள் தடுத்தும், சண்டை தொடர்ந்ததால் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து உணவு விடுதிக்கு வந்த காவதுறையினர் பாபி சிம்ஹா மற்றும் அவரது நண்பரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
English Summary
famous tamil actor warn by police because of drunk and fight wuth his frnd