பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மீது மோசடி வழக்குப்பதிவு.. போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மீது போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விமர்சகருமான ரவீந்தர் சந்திரசேகரன். இவர் சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகர் மீது அமெரிக்க வாழ் இந்தியரான விஜய் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆன்லைன் மூலம் பண மோசடி புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரியில் ரவீந்தர் தன்னிடம் 15 லட்சம் ரூபாய் கடனாக பெற்றதாகவும் கடத்தொகையை பலமுறை கேட்டும் அவர் திருப்பி தராததால் மோசடி செய்து வருவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை தொடர்ந்து தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மீது போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்ற பிரிவில் ரவீந்தர் சந்திரசேகர் விசாரணைக்கு ஆஜராகிய நிலையில், அவரிடம் விசாரணை நடைபெற்றது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Case filed against producer ravindhar


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->