சிகரெட் குடித்த ஹன்சிகா மீது போடப்பட்ட வழக்கு!. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!.
சிகரெட் குடித்த ஹன்சிகா மீது போடப்பட்ட வழக்கு!. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களுடன் நடித்து, அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஹன்சிகா. இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
ஹன்சிகா தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் ஹன்சிகா "மஹா" என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறார். யு.ஆர்.ஜமீல் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
மேலும், அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ஹன்சிகா கஞ்சா அடிப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அதை கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எக்ஸட்ரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் ஒரு போஸ்டரில் சாமியார் தோற்றத்தில் புகைப்பிடிப்பது போன்று ஹன்சிகாவின் தோற்றம் இடம்பெற்றிருந்தது.
தற்போது வெளியான இந்த போஸ்டரில் ஹன்சிகா காவி உடை அணிந்து புகைப்பிடிக்கும் புகைப்படங்கள் வெளியானதால், நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.