துணை நடிகை யாஷிகா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.! காவல் நிலையத்திற்கு விரைந்த யாஷிகாவின் தாயார்.!! வெளியான தகவல்.!! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தை சார்ந்தவர் மேரிஷீலா ஜெபராணி என்கிற யாசிகா (21). இவர் திரைத்துறையில் துணை நடிகையாக பணியாற்றி வருகிறார். நடிகர் விமல் நடிப்பில் வெளியான "மன்னர் வகையறா" திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார். மேலும்., பல தொலைக்காட்சி தொடரில் நடித்திருந்தார். 

தற்போது சென்னையில் உள்ள வடபழனியில் இருக்கும் விடுதியில் தங்கியிருக்கும் யாசிக்காவிற்கு., அங்குள்ள அலைபேசி பழுது பார்க்கும் கடையில் பணியாற்றிய வேலூர் மாவட்டம் பெரம்பூரை சார்ந்த அரவிந்த் மோகன்பாபு (வயது 22) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கமானது இவர்களுக்குள் காதலாக மாறவே., இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல்., பெரவள்ளூர் நகரில் இருக்கும் ஜி.கே.எம்.காலனி பகுதியில் கடந்த நான்கு மாதமாக கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில்., இவர்கள் இருவருக்குள் கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக ஏற்பட்ட கருது வேறுபாட்டின் காரணமாக மோகன்பாபு கோபடமடைந்து தனது இல்லத்திற்கு சென்றுள்ளார். காதலனை நம்பி வந்த சமயத்தில்., கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து சென்றதால்., மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார். 

இந்த நிலையில்., கடந்த 13 ம் தேதியன்று தனது இல்லத்தில் யாசிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

மேலும்., சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில்., தூக்கிடுவதற்கு முன்னதாக தனது அலைபேசியில் இருந்து வாட்சப் மூலமாக., "காதலித்து திருமணம் செய்து கொள்வர் என்று நம்பிக்கையில் இருந்த என்னை கொடுமைப்படுத்தி திருமணம் செய்ய தொடர்ந்து மறுத்து வந்துள்ளார்., நான் இறந்த பின்னர் அவருக்கு தக்க தண்டனை வாங்கி தரவேண்டும்" என்று பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில்., யாசிகாவின் தாயார் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும்., காதலன் அரவிந்த் தனது மகளை கொலை செய்து விட்டு., தற்கொலை நாடகம் ஆகியிருக்கலாம் என்று குற்றம் சாட்டி சென்னையில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணையை துவங்கியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress yashika suicide attempt case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->