காரில் என்னையும், என் சகோதரியையும் அந்த நபர் என்ன செய்தார் தெரியுமா? அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நடிகை.!!! - Seithipunal
Seithipunal


நடிகைகள் மீதான பாலியல் சீண்டல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பெரும்பாலான நடிகைகள் அதுபற்றி வெளியே கூறுவதில்லை.

ஆனால், ஒரு சில நடிகைகள், மற்றவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் சந்தித்த பாலியல் சீண்டல்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், ஏழு வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி பாலிவுட் நடிகை துவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.. 


 
நடிகை துவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

நானும் பாலியல் சீண்டலை என்னுடைய சிறுவயதில் சந்தித்துள்ளேன்.  

ஒரு நாள் நாங்கள் காரில் சென்று கொண்டிருந்தோம். 

எனது அம்மா காரை ஓட்டி சென்று கொண்டிருந்தார். 

அப்போது, எனக்கு பின்னால் அமர்ந்திருந்த அந்த நபர், என்னை தொடக்கூடாத இடத்தில் தொட ஆரம்பித்தார். அப்போது எனக்கு வயது ஏழு.

என்னுடன் அமர்ந்திருந்த எனது சகோதரியையும் அவர் சீண்டினார். அவருக்கு அப்போது 11 வயது.

இது பற்றி, எங்களது தந்தையிடம் கூறிவிட்டோம். அதன் பின்னர் அந்த நபரை எங்கள் தந்தை காவல்துறையில் பிடித்து கொடுத்தார் என்று  நடிகை துவா பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Some Actress face sexual abuse


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->