போக்குவரத்தை நிறுத்திய நடிகை ''சமந்தா''!!!
போக்குவரத்தை நிறுத்திய நடிகை ''சமந்தா''!!!
இந்த சினிமா மோகம் தமிழர்களை விட்டு செல்லாமல் இருப்பது, அரசியல்வாதிகளுக்கும், திரைத்துறையினருக்கும் கொண்டாட்டம் தான். தமிழகம் முழுவதும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராடி வரும் இளைஞர்களுக்கு மத்தியில். இன்று ஒரு நடிகையை காண போக்குவரத்தை முடக்கிய இளைஞர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
சென்னை அருகே செங்குன்றத்தில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகத்தை திறப்பதற்காக நடிகை சமந்தா இன்று வருகை வந்தார். அவரை காண 500கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நடிப்பில் ஈடுபட்டு வரும் சமந்தா, முதன் முறையாக சென்னையை அடுத்த செங்குன்றத்தில் ஒரு ஷாப்பிங் மாலை திறந்து வைத்தார்.
சமந்தா வருவதை அறிந்து இளைஞர்கள் மற்றும் ரசிகர்கள் சாலையின் இரு புறங்களிலும், வளாக வாயிலிலும் திரண்டனர். சமந்தாவைக் கண்டதும் ரசிகர்கள் சந்தோசத்தில் குதுகளித்தனர்.
முன் ஏற்பாடுகள் ஏதும் செய்யாததால், ரசிகர்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீஸார் திணறினர். இதை அடுத்து ஏராளமான தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
English Summary
Actress Samantha stopped traffic