தன் காதலனுக்காக பிரபல நடிகை செய்த விஷயம்.,அதிர்ந்த ரசிகர்கள்..!
தன் காதலனுக்காக பிரபல நடிகை செய்த விஷயம்.,அதிர்ந்த ரசிகர்கள்..!
நடிகை நயன்தாரா பொது மேடையில் தன்னுடைய காதலனுக்கு நன்றி ! என கூறி மேடையை அதிர வைத்துள்ளார்.
நடிகைகளுக்கு சாதாரணமாக சிறப்பு பெயர்கள் கிடைத்துவிடாது. தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால் நடிகர்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் நடிகைகளுக்கு இருக்காது
இவ்வாறு நடிகைகள் என்றாலே பாட்டு, டான்ஸ், நடிப்புதான் என நினைத்து கொண்டிருக்கும் மக்கள் மனதை நயன்தாரா மாற்றியுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஹீரோயின் சப்ஜெக்ட் படத்தை மட்டும் தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்து பெரிய வெற்றி கொடுத்தார், பெரிய பட்ஜெட் போட்டு படம் எடுக்கும் டைரக்டர்களின் நடிகை ஆனார்.இதனாலே " லேடி சூப்பர் ஸ்டார்" என அனைவரும் நயன்தாராவை பெருமைப்படுத்தினர் .
மேலும் ஆண்களின் கனவுக்கன்னியாக வலம்வரும் நயன்தாராவின் காதல் பிரபுதேவாவிடம் ஆரம்பித்து சிம்புவிடம் தொடர்ந்து இப்போது விக்னேஷ் சிவனிடம் வந்துள்ளது .இப்பொழுதெல்லாம் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் இருவரும் ஒன்றாகவே வருகின்றனர்.
மேலும் தான் காதலனுக்காக நயன்தாரா விருது விழாவுக்கு புடவை கட்டிவரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது . இவ்வாறு நயன்தாரா ஆங்கில பத்திரிக்கை ஒன்று நடத்திய World Of Women 2018 என்ற விருது விழாவில் கலந்து கொண்டார். அவருக்கு சினிமாவில் "சாதித்து வரும் பெண்" என்ற அடிப்படையில் விருது கொடுக்கப்பட்டுள்ளது.
அப்போது மேடையில் பேசிய நயன்தாரா, என்னுடைய இந்த வளர்ச்சிக்கு காரணமான என் அம்மா, அப்பா, அண்ணன் ஆகியோருக்கு நன்றி, பின் என்னுடைய காதலனுக்கும் நன்றி என பேசியுள்ளார்.
English Summary
The actress made one thing for her lover, stunned fans.