தமிழில் பட வாய்ப்பு இல்லாததால், அதிரடி முடிவெடுத்த அமலா பால்!
தமிழில் பட வாய்ப்பு இல்லாததால், அதிரடி முடிவெடுத்த அமலா பால்!
தமிழில் சினிமா வாய்ப்பில்லை, நடிகை அமலா பால் பாலிவுட் பக்கம் திரும்பியுள்ளார்.
தமிழில் மைனா என்ற படத்தின் மூலம் பிரபலமான அமலா பால். ஒரு காலத்தில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவந்தார். மைனா தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இப்படியெல்லாம் நடித்துக் கொண்டிருந்த அமலா பாலுக்கு தற்போது, தமிழில் சினிமா வாய்ப்பில்லை.
விஜய், ஜெயம் ரவி, தனுஷ் என்று முன்னணி மாஸ் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த அமலா பால் பாபி சிம்ஹா, அரவிந்த் சாமி ஆகியோருக்கு ஹீரோயினாக நடித்துள்ளார். தற்போது தமிழில் ராட்சசன் என்ற படத்தில் விஷ்ணுவிற்கு ஜோடியாக நடித்து வருகின்றார். இது தவிர மலையாளத்தில் ஒரு படத்திலும் விறுவிறுப்பாக நடிக்கிறார்.
இந்த நிலையில், இப்படங்களைத் தவிர தமிழில் ஒரு படமும் இல்லை. தமிழில் சினிமா வாய்ப்பில்லை. இதன் விளைவாக கோலிவுட்டை தவிர்த்து பாலிவுட் பக்கம் திரும்பியுள்ளார். பாலிவுட்டில் இயக்குனர் நரேஷ் இயக்கும் புதிய படத்தில் நடிகையுள்ளார். இவருடன் இணைந்து அர்ஜூன் ராம்பால் நடிக்கிறார்.
இது குறித்து அமலா பால் கூறுகையில், கடந்த சில வருடங்களாக பாலிவுட்டில் இருந்து எனக்கு பட வாய்ப்பு வருகிறது. ஆனால், சரியான ரோலுக்காக காத்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் என்னுடைய நடிப்பை பார்த்த நரேஷ் எனக்கு இந்த பட வாய்ப்பை தந்துள்ளார். அதன் பிறகு அவரை சந்தித்து கதை கேட்ட பிறகு எனக்கு பிடித்துப் போகவே இப்படத்தில் நடிப்பதற்கு சம்மதித்தேன்.
English Summary
actress amala paul has returned to bollywood