உயிருக்கு போராடும் இளம் சிறுமிக்காக நடிகர் விஷால் செய்த செயல்!. குவிந்துவரும் பாராட்டுக்கள்!.
உயிருக்கு போராடும் இளம் சிறுமிக்காக நடிகர் விஷால் செய்த செயல்!. குவிந்துவரும் பாராட்டுக்கள்!.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது நிரம்பிய ஆயிஷா என்ற சிறுமி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது நோயை குணப்படுத்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நடிகராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தில் செயலாளராகவும் இருக்கும் நடிகர் விஷால் தொலைக்காட்சியில் "நாமொருவர்" என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதன் மூலம் சமூகத்தில் அடிமட்டத்தில் வாழ்வாதாரத்திற்கு கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.
தற்போது ஆயிஷா என்ற 8 வயது சிறுமிக்கான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான ரூ 21 லட்சம் பணத்தை பலரின் உதவியுடன் திரட்டியுள்ளாராம். அந்த குழந்தையுடன் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து ஆயிஷாவுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 8 வயதான ஆயிஷாவுக்கு சுமார் 8 மணி நேர தொடர் சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு ஆயிஷா நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஷால் செய்த உதவிக்கு பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர். மேலும் சிகிச்சைக்கான ரூ 21 லட்சம் பணத்தை பலரின் உதவியுடன் திரட்டியதால், பணம் கொடுத்த அனைவருக்கும் விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.
English Summary
Actor vishal helping to young girl