தற்கொலை படை தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிவச்சந்திரனின் குடும்பத்திற்கு ரூ.1 இலட்சம் வழங்கிய நடிகர் ரோபோ சங்கர்.! குவியும் பாராட்டுக்கள்.!! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14 ம் தேதியன்று நடந்த தற்கொலை படை தாக்குதலில் சுமார் 40 துணை இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த 40 வீரர்களின் இருவர் தமிழகத்தை சார்ந்தவர்கள். 

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் கோவில்பட்டியில் இருக்கும் சாவலப்பேரியை சார்ந்த சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம் கார்குடியை சார்ந்த சிவச்சந்திரன் ஆகியோர் வீர மரணம் அடைந்தனர். 

இவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 இலட்சம் வழங்குவதாக நடிகர் ரோபோ சங்கர் தெரிவித்திருந்த நிலையில்., இன்று சிவச்சந்திரனின் இல்லத்திற்கு சென்ற ரோபோ சங்கர் அவர்ளுக்கு ஆறுதல் கூறி., ரூ.1 இலட்சம் காசோலையை வழங்கினார். 

இதற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது., 

திரைத்துறையை சார்ந்தவன் என்ற காரணத்தால் என்னிடம் இந்த இடத்தில்., திரைத்துறை சார்ந்த கேள்விகளை கேட்க வேண்டாம்., எல்லையில் எல்லை சாமியாய் இருந்து நம்மை காத்த தெய்வத்தின் இல்லத்திற்கு வந்துள்ளேன். 

அவர்கள் குடும்பத்தை பிரிந்து எல்லையில் பணியாற்றுவதாலேயே நாம் இங்கு மகிழ்ச்சியோடு இருக்கிறோம்., தமிழகத்தில் இருந்து இரண்டு எல்லை சாமிகளை இழந்தது ஈடுகட்ட இயலாத ஒரு இழப்பாகும். 

இந்த குடும்பத்திற்கு ஆறுதல் எந்த வகையில் கூறுவது என்று தெரியாத நிலையில்., சிவச்சந்திரனால் இந்த குடும்பம் இயங்கி வந்தது. அவரது பிரிவு சோகமான ஒன்று என்றாலும்., என்னால் இயன்ற அளவு உதவியை செய்துள்ளேன் என்று கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor robo shankar give money for CRPF officer sivachandran family


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->