நீண்ட இடைவேளைக்கு பிறகு போலீஸ் வேடத்தில் ரஜினி! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
actor rajini new movie
ரஜினி நடிப்பில் `பேட்ட’ படம் பொங்கலுக்கு வெளியாகி, ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ரஜினி அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரியில் துவங்கவிருப்பதாக கூறுகின்றனர்.
சமீபத்தில் படத்தின் பெயர் குறித்து பரவிய வதந்திக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முற்றுப்புள்ளி வைத்த நிலையில், தற்போது படத்தில் ரஜினி காவல் துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் பரவி வருகிறது. ரஜினி இதற்கு முன்பாக மூன்று முகம், பாண்டியன், கொடி பறக்குது உள்ளிட்ட படங்களில் காவலராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2.0 படத்தை தொடர்ந்து, ரஜினி நடிக்கும் இந்த படத்தையும் லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.