மீண்டும் திரைத்துறையில் கால் பதித்தார் பிரபல வில்லன் நடிகர்.!
மீண்டும் திரைத்துறையில் கால் பதித்தார் பிரபல வில்லன் நடிகர்.!
தமிழில், பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவான ‘சோலையம்மா’ படத்தில் அறிமுகமாகி, கொடூர வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் கரிகாலன். மேலும் இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 70 படத்திற்கும் மேல் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.
மேலும், ‘வைரவன்’ என்ற படத்தினை இவரே இயக்கி நடித்தது குறிப்பிடத் தக்கது. சில காலம் நடிப்பு, இயக்கம் என எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்த இவர், ரியல் எஸ்டேட் துறையில் கால் பதித்து பிரபலமான நிலையில், தற்போது மீண்டும் சினிமா துறையில் இறங்குகிறார்.
தமிழகத்தின், முன்னாள் முதல்வரான கர்ம வீரர் காமராஜர் மீது அதிக பற்று கொண்ட கரிகாலன். காமராஜர் கனவுக் கூடம் என்கிற பெயரில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளார். இதுகுறித்து அவர், சமுதாயத்திற்கு ஏற்ற வகையில் ஆபாசம் இல்லாத குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் விதமாக் கலாச்சாரம் மீறாமல் நல்ல கதைகள் கொண்ட படமாக வருடத்திற்கு பத்து படங்கள் தயாரிக்க உள்ளோம் என்று கூறினார்.
இதையடுத்து, நான் கெட்டவனாக நடித்து நல்லவனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதனால் எனக்கு ஒரே ஒரு ஆசை மட்டும் தான் உள்ளது. அது என்னை சுற்றி நடக்கும் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என்பது தான், என்று கூறிய அவர், அதற்காக நிறைய முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
English Summary
actor karigaalan once again enterin on cinema industry