சொத்துக்காக பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.!! சின்னத்திரையை மிஞ்சிய நாடகம்.!! - Seithipunal
Seithipunal


 

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையை அடுத்துள்ள குளத்தூர்ப்பட்டியை சார்ந்தவர் ஜேம்ஸ் ஆரோக்கியராஜ். இவரது மனைவியின் பெயர் விக்டோரியா. இவர் கடந்த 6 ம் தேதியன்று தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டார். 

இந்த சம்பவம் குறித்து கணவர் வீட்டாரின் மீது பெண் வீட்டார் புகார் அளித்ததையடுத்து., இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். இந்த விசாரணைக்கு சந்தேகத்தின் பேரில்., விக்டோரியாவின் கணவர் மற்றும் அவரது தாயை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில்., இராணுவத்தில் பணியாற்றிய ஜேம்ஸின் தந்தை ஜான் ஜோசப் அதிகளவு சொத்துக்களை அவரின் பெயரில் வைத்துள்ளார். மேலும் அந்த சொத்துக்கள் அனைத்தையும்., விக்டோரியாவின் குழந்தைக்கு எழுதி கொடுக்கப்போவதாகவும் கூறி வந்துள்ளார். 

இதன் காரணமாக நமக்கு சொத்துக்கள் கிடைக்காது என்று எண்ணி கடந்த 6 ம் தேதியன்று., ஜேம்ஸ் மற்றும் அவரது தாயாரின் திட்டப்படி இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்தது. 

மேலும்., யாருக்கும் சந்தேகம் வராத அளவிற்கு இருவரும் நடந்துகொண்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A WIFE KILLED BY HER HUSBAND WITH HER MOTHER


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->