பிறந்தநாளில் பெரும் சோகம்.!! நடிகர் சூர்யாவுக்கு பேனர் வைத்த ரசிகர்கள் பலி.!! - Seithipunal
Seithipunal


நேருக்கு நேர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சூர்யா. ஆரம்ப காலகட்டத்தில் சரியாக நடிப்பு வரவில்லை என விமர்சனம் செய்யப்பட்ட நடிகர் சூர்யா தனது வித்தியாசமான நடிப்பால் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். பேரழகன், ஆதவன், மாற்றான், ஏழாம் அறிவு உள்ளிட்ட படங்களில் நடிகர் சூர்யா தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

தற்போது அவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துவரும் கங்குவா திரைப்படம் தமிழ் சினிமாவில் பிரமாண்ட படைப்பாக வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது 48வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் போஸ்டர் ஒட்டுவது, பேனர் வைப்பது, கட்அவுட் வைப்பது, நலத்திட்ட உதவிகள் வழங்குவதான பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஆந்திராவில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் வைத்த போது அவருடைய ரசிகர்கள் 2 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் நசராவ்பேட்டை பகுதியில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக கட்டவுட் வைத்த போது மின்கம்பியில் பேனர் உரசியதில் மின்சாரம் பாய்ந்து வெங்கடேஷ், சாய் என்ற இளைஞர்கள் உயிரிழந்தனர். இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 Actor Suriya fans died due to electric shock


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->