இன்றைய (16.02.2019) பெட்ரோல், டீசல் விலை: மீண்டும் உச்சகட்ட விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி!
Today petrol diesel price increased
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.
இந்தநிலையில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனால் மக்களுக்கு தேவையயன அத்தியாவசிய பொருட்களின் விளையும் பல மடங்கு உயர்ந்து வந்தது.
இந்நிலையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்திக்கொண்டு இருந்த நிலையில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது குறைய தொடங்கியது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.
இந்தநிலையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.28 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 13 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.57 காசுகளாகவும் உள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்களாக பெட்ரோல் டீசல் விலை ஒரே விலையில் இருந்துவந்த நிலையில் மீண்டும் தொடர்ந்து இரண்டு நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.
English Summary
Today petrol diesel price increased