இந்தியாவில் மீண்டும் பணமதிப்பிழப்பு..?! 25 ஆயிரம் மட்டுமே கையில் வைத்திருக்க வேண்டும்..!! அதிரடி உத்தரவு..!!
இந்தியாவில் மீண்டும் பணமதிப்பிழப்பு..?! 25 ஆயிரம் மட்டுமே கையில் வைத்திருக்க வேண்டும்..!! அதிரடி உத்தரவு..!!
உயர் மதிப்புடைய ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் இந்தியாவில் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியானது. தற்போது கூட கோவை மாவட்டத்தில் பல கோடி ருபாய் அளவுக்கு கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டது.
கறுப்புப்பணத்தை ஒழிக்கும் விதமாக நாடு கடந்த நவம்பர் 8, 2016ம் ஆண்டு இரவு 8 மணி அளவில் மக்கள் மத்தியில் உரையாடிய நரேந்திர மோடி தீவிரவாதிகள் மத்தியில் பணநடமாட்டத்தை குறைக்கவும், பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டு வரும் விதமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவித்தார்.
முன்ஏற்பாடுகள் இன்றி திடீரென அறிவிக்கப்பட்ட இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பணப்புழக்கமின்றி மக்கள் திண்டாடினர். தங்கள் வங்கிக்கணக்கில் இருந்த பணத்தை கூட எடுக்க முடியாமல் வரிசையில் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதே இந்திய பணத்தை வைத்திருந்த பங்களாதேஷ். நேபாள். பூட்டன் உள்ளிட்ட வெளிநாட்டு மக்களும் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்நிலையில் இந்தியாவில் மீண்டும் பணமதிப்பிழப்பு அறிவிப்பு கொண்டு வரப்பட்டால் மக்கள் வைத்திருக்கும் ரூபாய் நோட்டுக்களுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது’’ என பூட்டான் நாட்டின் ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து பூட்டன் நாட்டின் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, ''இந்திய ரூபாயை ரொக்கமாகக் கையில் சேமித்து வைத்திருப்பதையும். செலவு செய்வதையும் நாட்டு மக்கள் தவிர்க்க வேண்டும். 2016 ஆம் ஆண்டு இந்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு அறிவிப்பு போல் காலத்தில் அந்நாடு கொண்டு வந்தால் மக்கள் நீங்கள் கையில் வைத்திருக்கும் இந்திய ரூபாய்க்கு பூடான் ரிசர்வ் வங்கி பொறுப்பேற்காது.
மேலும், இந்தியாவில் 500 ரூபாய் நோட்டுகளில் கள்ளநோட்டுகள் அதிகமாக புழங்குவதால் கவனத்துடன் நம் நாட்டு மக்கள் செயல்பட வேண்டும். நட்டு மக்கள் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் இந்திய பணத்தை கையில் வைத்திருக்க வேண்டாம்'' என்று தெரிவித்துள்ளது.
இதேபோல், பூட்டன் நாட்டின் ராயல் மானிட்டரி அத்தாரிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,''இந்திய ரூபாய் நோட்டுக்களை கையில் வைத்திருக்காமல் மக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்துவிடுங்கள்’’ என்று தெரிவித்துள்ளது.
English Summary
POOTTAN RESERVE BANK NEW ORDER