அட்சய திருதியை நாளில் அதிர்ச்சி.. தங்கம் விலை அதிரடி உயர்வு.!! எவ்வளவு பாருங்க.? - Seithipunal
Seithipunal


இன்று அட்சய திருதியை நாளில் பொதுமக்கள் பலரும் தங்கம் நகை வாங்குவதில் ஆர்வமாக இருந்து வருகின்றனர். இந்த நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது மக்களின் அதீத நம்பிக்கையாக இருந்து வருகிறது. 

அதன்படி இன்று அட்சய திருதியை நாள் என்பதால் பொதுமக்கள் பலரும் நகை வாங்க இருந்த நிலையில் காலையிலேயே அதிர்ச்சி தரும் விதமாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. 

சென்னையில் 22 கேரட் ஆபரன தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53,280 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இது கிராமுக்கு ரூபாய் 90 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 6,660 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று வெள்ளி விளையும் கிராமுக்கு ரு.1.30 உயர்ந்து ஒரு கிராம் 90 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என காத்திருந்த குடும்பத் தலைவிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்கம் விலை காலையிலேயே உயர்த்தப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gold price rs360 per gram Hike


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->