அதிரடியாக உயர்ந்த பூக்கள் விலை - அதிர்ச்சியில் பொதுமக்கள்.!
flower price increase in madurai
பண்டிகை நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை திடீரென உயர்ந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல், பூக்களின் வரத்து குறைவதாலும் பூக்களின் விலை குறையும். அந்த வகையில், தொடர் பனிப்பொழிவு காரணமாக மதுரை மல்லிகைப்பூ விளைச்சலுக்கான சீசன் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இந்த நிலையில், மல்லிகைப்பூ ஒரு கிலோ 3,000 ரூபாய்க்கும், பிச்சிப்பூ மற்றும் முல்லைப்பூ 1,200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கனகாம்பரம் கிலோ 1,000 ரூபாய்க்கும், அரளிப்பூ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், பட்டன்ரோஸ் 120 ரூபாய்க்கும், செவ்வந்தி பூ 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் தெரிவித்தாவது, அடுத்த சில வாரங்களுக்கு பூக்களின் விலை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
English Summary
flower price increase in madurai