வெள்ளைப்பூண்டை பெண்ணுறுப்பிற்குள் வைத்தால் இந்த பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபடலாம்.!!  - Seithipunal
Seithipunal


இன்றுள்ள பெரும்பாலான பெண்களுக்கு பிறப்புறுப்பு பகுதியில் வெள்ளைப்படுதல் மற்றும் அரிப்புகள் போன்ற பிரச்சனையால் கடுமையாக அவதியுற்று வருகின்றனர். இந்த பிரச்சனை ஈஸ்ட் தொற்றாக இருப்பதன் விளைவாக இந்த பிரச்சனை ஏற்படுகிறது. பெரும்பாலும் இன்றுள்ள காலங்களில் அனைத்து நாட்களிலும் பணிக்கு சென்று வரும் பெண்களுக்கு., இந்த பிரச்சனை எப்போது வேண்டும் என்றாலும் ஏற்படும் என்ற காரணத்தால் பல நேரத்தில் தர்மசங்கட நிலைகளுக்கு உள்ளாகும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். 

இந்த பிரச்சனையை எதிர்கொள்வதற்கு எளிய வழிமுறை உள்ளது. அந்த வழிமுறை குறித்து இனி காண்போம். இல்லங்களில் சமையலுக்கு பயன்படும் பூண்டு., பிறப்புறுப்பில் ஏற்படும் ஈஸ்ட் தொற்று அரிப்பிற்கு நல்ல தீர்வாகும். இதனை ரகசியமாக செய்வது இப்போதுள்ள சூழ்நிலையில் நல்லது. ஏனெனில் யார் நல்லவர்கள்? யார் கெட்டவர்கள் என்ற வேறுபாடும் இல்லாத ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு வருகிறோம்.   

இந்த பிரச்சனையை எதிர்கொள்வதற்கு ஒரு பூண்டு பல்லை தோல் நீக்கி எடுத்து கொண்டு இரண்டாக வெட்டியோ அல்லது முழுவதுமாகவோ மென்மையான நூலை கொண்டு பூண்டின் நடுவே கோர்த்து., உறங்குவதற்கு முன்னதாக பெண்ணுறுப்பிற்குள் வைத்து கொள்ள வேண்டும். பின்னர் உறங்கி காலையில் எழுந்தவுடன் அந்த பூண்டானது அதுவாக வெளியே வந்துவிடும் அல்லது நூலின் உதவியுடன் மெதுவாக அவசரப்படாமல் எடுக்க வேண்டும். இந்த முறையை இரண்டு அல்லது ஒரு முறை மேற்கொண்டால் போதுமானது. 

இந்த முறை மூலமாக மட்டுமல்லாது பூண்டை பச்சையாக கடித்து சாப்பிட்டால் ஈஸ்ட் தொற்றில் இருந்து எளிதில் விடுபடலாம். பூண்டில் இருக்கும் ஆண்டி-மைக்ரோபியல் என்னும் பொருளானது இந்த பிரச்சனைக்கு தீர்வை தருகிறது. இதுமட்டுமல்லாது பூண்டை பயன்படுத்தி தயாரிக்கப்படும் வெஜினல் க்ரீமான குளோட்ரிமஷோல் மூலமாகவும் இந்த தொற்றானது குணப்படுத்தப்படுகிறது. 

இந்த முறையை மேற்கொள்ளும் சமயத்தில் பெண்ணுறுப்பில் எரிச்சல் மற்றும் வலி போன்று ஏதேனும் தென்படும் பட்சத்தில் மருத்துவரை அணுகி ஆலோசிப்பது நல்லது. பெரும்பாலும் ஈஸ்ட் தொற்றை சரி செய்வது ஒரு நாள் மற்றும் இரண்டு நாட்கள் இந்த முறையை மேற்கொள்வதுபோதுமானது. இந்த செயல்முறையை செயல்படுத்துவதற்கு முன்னதாக மருத்துவரை அணுகி ஆலோசனை செய்து கொள்வது நல்லது., ஏனெனில் நாம் படுத்துறங்கும் முறையை பொறுத்து பூண்டானது பெண்ணுறுப்பிற்குள் செல்ல வாய்ப்புள்ளது. இதனால் நூலை கட்டுவதன் மூலமாக அதனை வெளியே கொண்டு வந்துவிடலாம். 

மேலும் உணர்தல் அதிகளவு உள்ள நபர்களுக்கு அரிப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இரத்த போக்கு பிரச்சனைகள்., இரத்த அடர்த்தி குறைப்பு மருந்துகள் மற்றும் எச்.ஐ.வி சிகிச்சை பெரும் நபர்கள் இந்த முறையை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏனெனில் இதனால் சில ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனைகள் இல்லாத பெண்களுக்கு இந்த முறையானது நல்ல தீவை வழங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girls attend problem of itching in birth part solve using this method


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->